Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசு ஒழிப்புப் பணி

Print PDF

தினமணி 09.09.2010

கொசு ஒழிப்புப் பணி

பழனி, செப். 8: பழனியில் பெரிய அளவிலான போகிங் மெஷின் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

பழனி வார்டு பகுதிகளில் கடந்த காலங்களில் சிறிய போகிங் மெஷின் மூலம் நகராட்சிப் பணியாளர்கள் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

இந் நிலையில், பெரிய அளவிலான போகிங் மெஷின் கொண்டு வார்டு பகுதிகளில் கொசு மருந்தை மினி லாரி வாகனங்களில் கொண்டு சென்று தெளிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் மூர்த்தி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஹக்கீம் ஆகியோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியைத் துவக்கி வைத்தனர்.

ஒருவார காலம் இந்த இயந்திரம் மூலம் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். பைத்ரீன் மற்றும் டீசல் கலந்து பெரிய போகிங் இயந்திரம் மூலம் ஸ்பிரே செய்யப்படுகிறது. அடிவாரம் மதனபுரம், இட்டேரி ரோடு, அடிவாரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இப் பணியில் நகர்நல அலுவலர் (பொறுப்பு) நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அபுதாகீர், அனீபா, பழனிச்சாமி, களப் பணி உதவியாளர் நாகராஜ், ஆண்கள் சுய உதவிக் குழுத் தலைவர் தாரிக்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.