தினமலர் 13.09.2010
கோவில்பட்டி நகராட்சியில் இலவச மருத்துவ முகாம்
கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் நடந்த இலவச மருத்துவ முகாமில் 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி சார்பில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுப்பிரமணியபுரம் சமுதாய கூடத்தில் நடந்த இலவச முகாமிற்கு நகர்மன்ற தலைவி மல்லிகா தலைமை வகித்தார். ஆணையாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். முகாமில் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் கமலா மாரியம்மாள், சுபா, துரைபத்மநாதன் மற்றும் சுபாஷினி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். துப்புரவு அலுவலர் ராஜசேகரன், ஆய்வாளர் சீனிவாசன், தர்மராஜ், வெங்கடேசன், ஸ்டான்லிகுமார், மகப்பேறு உதவியாளர்கள் ராஜேஸ்வரி, லலிதா, கோமதி, மகாலட்சுமி மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் சண்முகசுந்தரி, கோதை ஆகியோர்
கலந்து கொண்டனர். முகாமில் 500பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.