தினகரன் 22.09.2010
போளூரில் காலாவதியான குளிர்பானம் அழிப்பு
போளூர், செப்.22: போளூரில் உள்ள பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் (பொறுப்பு) தேவபார்த்த சாரதிக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பிரகாஷ் ஆலோசனையின் பேரில் சுகாதாரப் பணிகளின் மேற்பார்வையாளர் அண்ணாமலை, போளூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் ஆகியோர் பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு குளிர்பான கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 4 பெட்டிகளில் 48 பாட்டல் காலாவதியான குளிர்பானம் இருந்தது கண்டறி யப்பட்டது. அந்த பாட்டல்களை பறிமுதல் செய்த சுகாதாரத் துறையினர் அதே இடத்தில் உடைத்து குளிர்பானத்தை அழித்தனர். இதன் மதிப்பு ரூ1600 ஆகும்.