தினகரன் 28.09.2010
குடிநீர் காய்ச்சி குடிக்க அதிகாரி வேண்டுகோள்
கோபி, செப். 28:கோபி நகராட்சி ஆணையாளர் குப்பமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோபி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. நகர மக்களுக்கு குடிநீர் வழங்கம் பவானி ஆற்றிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே குடிநீரை மக்கள் காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்‘ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.