Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கவுன்சிலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமலர் 29.09.2010

கவுன்சிலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு நேற்று பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த மாநகராட்சி மன்றக் கூடத்தில் கவுன்சிலர்களுக்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்று கவுன்சிலர்கள், கோரிக்கை வைத்தனர். மன்றக் கூட்டம் முடிந்ததும் கவுன்சிலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. 92 கவுன்சிலர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கடந்த ஒரு வாரத்தில் 15 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் குடிசை பகுதிகளில் வினியோகிக்கப்பட்டதாகவும், மேயர் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 29 September 2010 08:16