Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை காய்ச்சிக் குடியுங்கள்

Print PDF

தினமணி 29.09.2010

குடிநீரை காய்ச்சிக் குடியுங்கள்

கோபி, செப்.28: கோபியில் குடிநீரை காய்ச்சிக் குடிக்கும்படி பொதுமக்களுக்கு கோபி நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோபி பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பவானி ஆற்றிலிருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீர் கோபி நகராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதனால் கோபி நகராட்சிக்கு உள்பட்ட வார்டு பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பயன்படுத்த ஆணையாளர் குப்பமுத்து கேட்டுக் கொண்டுள்ளர்.