Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 05.10.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

ஈரோடு: பவானி மற்றும் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வதால், மாநகராட்சி பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி, குடிக்க மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாநகராட்சி அறிக்கை:பவானி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில், தற்போது நல்ல மழை பெய்வதால், ஆற்று நீரின் அளவுக்கேற்ப மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில், காவிரியாற்றிலிருந்து உரிய நேரத்துக்கு குடிநீர் பம்பிங் செய்வது தடைபடுகிறது. நகருக்கு குறித்த நேரத்தில், குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.மக்கள் விநியோகிக்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.