Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினமணி 05.10.2010

மாநகராட்சி பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

கோவை,அக்.4: கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி உதவி நகர் நல அதிகாரி அருணா கூறியது:

மாநகராட்சிப் பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்டங்களில் தினமும் ஒரு மாணவரைப் பேச வைத்து, பன்றிக் காய்ச்சல் வருவதற்கான காரணம் மற்றும் அதன் பாதிப்புகள், தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் 4 மண்டலங்களில் 72 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக் காலத்தில் வீதியோரங்களில் தண்ணீர் தேங்குவது, கொசு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தண்ணீர் தேங்காமல் கவனிக்க வேண்டும். கொசு மருந்தின் வீரியத்தை அதிகரிப்பது குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசப்படும் என்றார்