Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீரால் சுகாதாரக் கேடு: நகராட்சி ஆணையரிடம் புகார்

Print PDF

தினமணி 06.10.2010

கழிவுநீரால் சுகாதாரக் கேடு: நகராட்சி ஆணையரிடம் புகார்

ஒசூர்,​​ அக்.​ 5:​ ஒசூரில் கழிவுநீருடன் மனிதக் கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ ஒசூர் நகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் ரெயின்போ கார்டன் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

​ ஒசூர் நகராட்சிக்குள்பட்ட 3-வது வார்டில் ராஜேஸ்வரி நகர்,​​ ராஜீவ் நகர்,​​ தாயப்பத் தோட்டம்,​​ ஜேஜே நகர்,​​ வசந்த் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

​ இதில் தாயப்பத் தோட்டம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மனிதக் கழிவுகள் கலந்து விடுகிறது.​ இக்கால்வாயில் உருவாகும் கொசுக்கள் கடித்து,​​ தொற்றுநோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர். ​ இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் கூறியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.