தினமணி 08.10.2010
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி தீவிர நடவடிக்கை
கம்பம், அக். 7: தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பராவாமல் தடுப்பதற்காக தெருக்களின் கழிவு நீர் ஓடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சியின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் நகராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறையினர் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். நகராட்சியின் சார்பில் அனைத்து வார்டுகளிலும், கழிவுநீர் ஓடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் கூடலூர் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொசு மருந்து அடிக்கும் பணியினை நகராட்சி தலைவர் ஜெயசுதாசெல்வேந்திரன், ஆணையர் சுந்தரம், நகராட்சி சுகாதர மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், தினேஷ் ஆகியோர் நேரில் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
டெங்கு போன்ற தொற்று நோய்கள் பராவாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும், தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் தெரிவித்தார்.