தினமணி 13.10.2010
இன்று தீவிர கொசு ஒழிப்பு பணி
நாமக்கல்
, அக். 12: நாமக்கல் நகராட்சியில் புதன்கிழமை தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக, நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் விடுத்துள்ள செய்தி:கொசு வளர்ச்சியைக் கட்டுப் படுத்தவும்
, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கொசு மற்றும் கொசுப் புழுக்களை அழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி
, புதன்கிழமை நகர் முழுவதும் 200 சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு தீவிர கொசு ஒழிப்புப் பணி நடைபெறும். அபேட் மருந்து மற்றும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் தெளிக்கவுள்ளனர். வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.வீடுகளில் உள்ள கழிவு நீர் செல்லும் குழாய்களுக்கும்
, சாக்கடைத் தொட்டிகளுக்கும் வலை கட்டிக் கொள்ள வேண்டும். கொசு எந்த நிலையிலும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.