தினகரன் 14.10.2010
டாஸ்மாக் கடை பார்களில் சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட் அழிப்பு
திருத்தணி
, அக். 14: திருத்தணி பகுதி டாஸ்மாக் கடை பார் மற்றும் குளிர்பான கடைகளில் சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படுவது இல்லை என்று திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.அவரது உத்தரவின்படி
, மாவட்ட துணை சுகாதார இயக்குனர் சம்பத் மேற்பார்வையில் திருத்தணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாமுவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சம்பத் மற்றும் சுகாதார அதிகாரிகள் டாஸ்மாக் பார் மற்றும் குளிர்பான கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது
, திருத்தணி சன்னதி தெரு, அரக்கோணம் சாலை, சென்னை பைபாஸ் சாலை, சித்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில், போதிய சுகாதாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை உடனே சீர் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்
. மேலும் டாஸ்மாக் பார் மற்றும் குளிர்பான கடைகளில் இருந்த சுகாதாரமற்ற குடிநீர் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.