தினகரன் 21.10.2010
காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி, அக். 21: காரைக்குடி நகராட்சி பகுதியில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. காரைக்குடி நகராட்சி பகுதியில் காலாவதி உணவு பொருட்கள் ஆய்வு ஆணை யாளர் ரவிச்சந்திரன் தலை மையில் நடத்தப்பட்டது. நகர்நல அலுவலர் மீனாட்சி, உணவு ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் 100 அடிரோடு, கல்லுக்கட்டி, வ.உ.சி. ரோடு, முடியரசன் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.