தினமலர் 22.10.2010
ப.வேலூர் டவுன் பஞ்.,ல் தீவிர கொசு ஒழிப்பு பணி
ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், தீவிர கொசு ஒழிப்பு பணி நடந்தது. டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் கணேசன் தலைமை வகித்து, கொசு ஒழிப்பு பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து சுல்தான்பேட்டை, தெற்குநல்லியாம்பாளையம், சக்திநகர் உள்ளிட்ட 18 வார்டுகளில் உள்ள திறந்த வெளிக் கிணறு உள்ளிட்டவற்றில் அபேட் மருந்து தெளித்தனர். மேலும், பொது சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் சதீஷ்குமார், வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.