தினமணி 22.10.2010
சைதாப்பேட்டையில் சுகாதாரமற்ற
300 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்சென்னை சைதாப்பேட்டை சி
.ஐ.டி. நகரில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்யும் மாநகராட்சி சுகாதாரத் துறைசென்னை
, அக்.21: சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 300 கிலோ உணவுப் பொருள்களை சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்த விவரம்
:சைதாப்பேட்டை சி
.ஐ.டி. நகரில் தள்ளுவண்டிகள் மூலம் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு புகார் வந்தது.இதையடுத்து உதவி சுகாதார அலுவலர் டாக்டர் ஜி
.ராஜ்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்முருகன் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.சி
.ஐ.டி. நகர் 1-வது மற்றும் 3-வது பிரதான சாலைகள், கேனால் பேங்க் சாலை ஆகிய பகுதிகளில் 5 தள்ளுவண்டிகளில் சுகாதாரமற்ற முறையில் இட்லி, போண்டா, பூரி, தோசை போன்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரமற்ற 300 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர். மேலும் விற்பனைக்குப் பயன்படுத்திய தள்ளுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.