தினமலர் 08.11.2010
இணை ஆணையர் ஆய்வு
அம்மாபேட்டை: பவானி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க சாக்கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.பவானி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள சாக்கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. மழை காலம் துவங்கிய நிலையில், தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. நகராட்சி நிர்வாக இணை ஆணையர் சந்திரசேகரன், சாக்கடைகளை பார்வையிட்டு, தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும், அடிக்கடி சாக்கடை சுத்தம் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மண்டல உதவி செயற்பொறியாளர் சண்முகம், பவானி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.