Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

150 டன் பட்டாசுகுப்பை அகற்றம்

Print PDF

தினமலர்                         08.11.2010

150 டன் பட்டாசுகுப்பை அகற்றம்

சேலம்: சேலம் மாநகர பகுதியில் 150 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டது. சேலம் மாநகராட்சியில் நாள்தோறும் 500 டன் குப்பைகள் சேகரிக்கப் பட்டு வருகிறது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் மாநகர பகுதியில் கூடுதலாக குப்பைகள் சேகரிக்கப்படும். கடந்த மாதம் ஆயுத பூஜையில் சேலம் மாநகராட்சியில் 2,000 டன் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டது. விசேஷ நாட்களில் சிறப்பு துப்புரவு பணி மூலம் குப்பைகள் அள்ளப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி பண்டிகைக்காக வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இரண்டு நாளில் மட்டும் 150 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டது.