Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்கால் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

Print PDF

தினமணி                            09.11.2010

காரைக்கால் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

காரைக்கால், நவ. 8: காரைக்கால் நகரக் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு கலந்து குப்பைகள் தேங்குவதாகவும், நகராட்சி நிர்வாகம் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

காரைக்கால் நகரில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தனியார் மூலம் அகற்றி வருகிறது. உரிய முறையில் இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படாததால், பல நாள்களாக அவை தேங்கிக்கிடக்கின்றன.

காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையம் அருகே கழிவுநீர் செல்லும் பாதை அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், கழிவுநீர் எளிதில் வடிய முடியாமல் சாலையில் தேங்குவதாக அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

மழைக் காலம் என்பதால் நகரில் குப்பைகள், கழிவுநீர் தேங்காத வகையில் உரிய முறையில் கண்காணித்து, அவற்றை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தினர்.