தினமணி 09.11.2010
காரைக்கால் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு தேங்கிக் கிடக்கும் குப்பைகள்
காரைக்கால்
, நவ. 8: காரைக்கால் நகரக் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு கலந்து குப்பைகள் தேங்குவதாகவும், நகராட்சி நிர்வாகம் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.காரைக்கால் நகரில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தனியார் மூலம் அகற்றி வருகிறது
. உரிய முறையில் இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில்
, பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படாததால், பல நாள்களாக அவை தேங்கிக்கிடக்கின்றன.காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையம் அருகே கழிவுநீர் செல்லும் பாதை அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன
. இதனால், கழிவுநீர் எளிதில் வடிய முடியாமல் சாலையில் தேங்குவதாக அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.மழைக் காலம் என்பதால் நகரில் குப்பைகள்
, கழிவுநீர் தேங்காத வகையில் உரிய முறையில் கண்காணித்து, அவற்றை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தினர்.