Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோகனூர் டவுன் பஞ்., பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர்             11.11.2010

மோகனூர் டவுன் பஞ்., பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி துவக்கம்

மோகனூர்: டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை அழிக்கும் வகையில், மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது தொடர்மழை பெய்து வருவதால், பள்ளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கி உள்ள மழைநீரில் தொற்று நோயை ஏற்படுத்தும் கொசுக்குள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கையாகவும் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டவுன் பஞ்சாயத்து உட்பட்ட 15 வார்டுகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் கருணாநிதி தலைமையில், கொசு மருந்து அடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் சென்ற கொசு மருந்து அடித்து கொசுக்களின் உற்பத்தியை தடுத்தனர். மேலும், "தண்ணீரை நன்கு காய்ச்சி ஆரவைத்தும் குடிக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.