தினகரன் 16.11.2010
ஜிம்கானா தடுப்பணையில் தூர்வாரும் பணி தீவிரம்
குன்னூர்
, நவ.16: நீரை அதிகளவில் சேமித்து மக்களுக்கு வினியோகிக்க ஜிம்கானா தடுப்பணையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.குன்னூர் நகர பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ஜிம்கானா தடுப்பணையில் நீர் சேகரிக்கப்பட்டு முக்கிய பகுதிகளுக்கு நீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது
. நீண்ட நாட்களாக அணை தூர் வாரப்படாததால் குறைந்த அளவிலேயே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. பெருமளவிலான நீர் இத னால் விரையமாகி வருகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வந்தாலும் தடுப்பணையில் முழுமையாக நீரை சேமித்து வைக்க இயலாத நிலை காணப்படுகிறது. எனவே தடுப்பணை யை சீரமைக்க நகரா ட்சி நிர்வாகம் முடிவு செய்துள் ளது. குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறும் போது, ரூ.10 லட்சம் செல வில் தடுப்பணையை தூர் வாரி நீரை சேமிக்கும் வகை யில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 8 அடி ஆழத்திற்கு சேறு, சகதிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத னை ஆழப்படுத்தி ஒரு வாரத்திற்குள் முழுமையாக பராமரிக்கப்படும். அதன் பின்னர் தடுப்பணையில் நீரை சேமித்து மக்களுக்கு வினியோகிக்கப்படும். மழை காலம் நிறைவு பெறும் முன் தடுப்பணை கட்டும் பணி நிறைவு பெற்று அணையில் நீர் சேமிக்கப்படும் என்றார்.