மாலை மலர் 25.08.2009
சுகாதாரமற்ற முறையில் விற்பனை: 200 பிளாட்பார கடைகளில் உணவு பொருட்கள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் இன்று நடவடிக்கை
மதுரை, ஆக. 25-
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மற்ற முறைகளில் பிளாட் பாரங்கள் வடை, பஜ்ஜி மற்றும் உணவு பலகாரங்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை சுகாதாரத் துறை அதிகாரி யசோதை மணி தலைமையில் அதிகாரிகள் இன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பெரியார் பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, நேதாஜி வீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட பிளாட்பார கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது. அந்த கடையில் இருந்து உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு பிளாட்பாரத்தில் கடை போடக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.