தினமணி 19.11.2010
கொசு ஒழிப்பு முகாம்
சிங்கம்புணரி
, நவ. 18: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு தீவிர முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடத்திய முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ஜெயக்கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் மங்களேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாமில் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள் மற்றும் முக்கிய வீதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் வடிவேல்
, சுரேஷ், மோகன், சாத்தையா மற்றும் பேரூராட்சித் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் சேரலாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன் செய்திருந்தார்.