Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரியலூர் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து

Print PDF

தினகரன்                20.11.2010

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரியலூர் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து

அரியலூர், நவ. 20: அரியலூர் நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. அரியலூர் நகரில் தற்போது பெரும்பாலானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து டெங்கு காய்ச்சால் பரவாமல் தடுப்பதற்காக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் பொன்னுசாமி தலைமையில் நடந்தது.

சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். காய்ச்சல் குறித்து அரியலூர் நகரில் ஆய்வு நடத்தவும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் நகர் முழுவதும் கொசுக்களை அழிக்க உடனடியாக புகை மருந்து அடிக்க வேண்டுமென கலெக்டர் பொன்னுசாமி தெரிவித்தார்.

இதையடுத்து அரியலூர் நகரில் வீடுவீடாக சென்று மருத்துவத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். நகராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் இயந்திரம் மூலம் கொசு மருந்தை துப்புரவு தொழிலாளர்கள் அடித்தனர். நகராட்சி தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.