Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரு​மேனி ஆற்​றில் குப்​பைக் கழி​வு​க​ள் ​ கொட்​டு​வதை தடை செய்ய வலி​யு​றுத்​தல்

Print PDF

தினமணி             20.11.2010

கரு​மேனி ஆற்​றில் குப்​பைக் கழி​வு​க​ள் ​ கொட்​டு​வதை தடை செய்ய வலி​யு​றுத்​தல்

சாத்​தான்​கு​ளம்,​​ நவ.19: ​ சாத்​தான்​கு​ளம் கரு​மேனி ஆற்​றில் குப்​பைக் கழி​வு​களை பேரூ​ராட்சி நிர்​வா​கம் கொட்​டு​வதை தடை செய்ய வேண்​டும் என பொது​மக்​கள் ஆட்​சி​ய​ரி​டம் மனு அளித்​துள்​ள​னர்.​

சாத்​தான்​கு​ளம் திமுக.​ நக​ரச் செய​லர் ஏ.எஸ்.ஜோசப் தலை​மை​யில் கல்​விக் கழக நிறு​வ​னர் சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ பன்​னம்​பாறை ஊராட்​சித் தலை​வர் சந்​திரா,​​ திமுக கிளைச் செய​லர் செல்​வ​ராஜ்,​​ இயற்கை யோகா நல​வாழ்வு சங்​கச் செய​லர் ராம​கி​ருஷ்​ணன்,​​ திமுக ஒன்​றிய பொரு​ளா​ளர் முஸ்​தபா உள்​ளிட்ட 50-க்கு மேற்​பட்ட ​ பொது​மக்​கள் தூத்​துக்​குடி மாவட்ட ஆட்​சி​யர் மகேஸ்​வ​ர​னி​டம் அளித்த மனு:​

÷சாத்​தான்​கு​ளத்​தில் உள்ள கரு​மேனி ஆற்​றின் வழி​யாக மழைக்​கா​லங்​க​ளில் வைர​வன்​த​ருவை,​​ புத்​தன்​த​ருவை குளங்​க​ளுக்கு தண்​ணீர் செல்​கி​றது.​ ​÷தற்​போது ​ இந்த ஆற்​றில் பேரூ​ராட்சி மூலம் சேக​ரிக்​கப்​ப​டும் குப்​பை​க​ளும்,​​ கழி​வு​க​ளும் கொட்​டப்​ப​டு​கின்​றன.​ இத​னால் ஆறு மேடா​கி​யுள்​ளது.​

​ ​ குப்​பை​க​ளில் உள்ள பிளாஸ்​டிக் பொருள்​கள் ஆற்​றில் அடித்​துச் செல்​லப்​பட்டு வைர​வன்​த​ருவை,​​ புத்​தன்​த​ருவை குளங்​க​ளில் தங்​கு​கி​றது.​ பிளாஸ்​டிக் கழி​வு​கள் குளத்​தின் அடி​யில் படி​வ​தால் மழை​நீர் நிலத்​த​டி​யில் இறங்க வழி​யில்லை.​ ​ இத​னால் நிலத்​தடி நீரின் தன்மை மாறா​மல் போய்​வி​டும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

இது சம்​பந்​த​மாக பேரூ​ராட்சி நிர்​வா​கத்​தி​டம் பல​முறை முறை​யிட்​டும் எந்த நட​வ​டிக்​கை​யும் இல்லை.​ இத​னால் சுகா​தார சீர்​கே​டும்,​​ தொற்று நோய் பர​வும் அபா​ய​மும் ஏற்​ப​டு​கி​றது.​ ​​ எனவே குப்​பை​களை ஆற்​றில் கொட்​டா​மல் பேரூ​ராட்​சிக்​கென்று தனி​யாக இடத்தை தேர்வு செய்து அந்த இடத்​தில் குப்​பை​களை கொட்ட வேண்​டும் என்​ற​னர் அவர்​கள்.​ ​

÷இது சம்​பந்​த​மாக பன்​னம்​பாறை ஊராட்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மான நகலை பன்​னம்​பாறை ஊராட்​சித் தலை​வர் சந்​திரா ​ ஆட்​சி​ய​ரி​டம் அளித்​தார்.