தினகரன் 24.11.2010
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு உற்பத்தியை தடுக்க 15 பணியாளர்கள் நியமனம்
ஆறுமுகநேரி, நவ. 24: தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரதுறை மற் றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பூச்சிகளி னால் பரவும் நோய்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு காயல்பட்டி னம் எல்கே மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. காயல்பட்டினம் நகராட்சி துணைத்தலைவர் கஷாலி மரைக்கார் தலை மை வகித் தார். எல்கே மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் முகமது ஹனிபா முன்னிலை வகித் தார். காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
கொசுக்களின் வகைகள், அவற்றால் ஏற்படும் மலேரி யா, சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாகவும், இதனால் வீடு களில் தண் ணீர் தேங்காமல் இருக்க வும், கொசுக்கள் உற்பத்தி யை தடுப்பது குறித்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் கொசுக்களை உற்பத்தியை கட்டுப்படுத்த 15 தினக்கூலி பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அபேட் கரைசல் தெளிக்க உள்ளனர்.
இதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்கு னர் டாக்டர் உமா தெரிவித் தார். கொசு உற்பத்தி மற் றும் தடுக்கும் முறைகள் பற்றிய கண்காட்சி இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர்கள் சதக்கல்லா, மும் பை முகைதீன், சொளுக்கு, சுகு, கிதிர் பாத்திமா மற்றும் கிதிர்பாத்திமா, சுகாதார ஆய்வாளர் முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.
காயல்பட்டினத்தில் நடந்த பூச்சிகளினால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா பேசினார்.