Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடைக்கானலில் சுகாதாரமற்ற ஓட்டல்கள் மீது நடவடிக்கை ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்          26.11.2010

கொடைக்கானலில் சுகாதாரமற்ற ஓட்டல்கள் மீது நடவடிக்கை ஆணையாளர் எச்சரிக்கை

கொடைக்கானல், நவ.26: கொடைக்கானலில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஓட்டல்கள், லாட்ஜ்கள் மீது கடும் நடவடிககை எடுக்கப்படும் என்று ஆணையாளர் ராஜன் கூறியுள்ளார்.

கொடைக்கானலில் சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவு, பார்க்கிங் இல்லாமல் லாட்ஜ்கள் நடத்துவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் ராஜன் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவை ஓட்டல்களில் வழங்க வேண் டும். சுகாதாரமற்ற முறை யில் நடத்தப்படும் ஓட்டல்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். பார்க்கிங் இல்லாமல் நடத்தப்படும் லாட்ஜ்கள் மீதும் நடவடிக்கை பாயும்,’’என்றார்.