தினகரன் 29.11.2010
திருக்காம்புலியூரில் ரூ5 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் திறப்புகரூர்
, நவ.29: இனாம்கரூர் நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் ரூ5லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் நவீன பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதிமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி புதிய கழிப்பிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ.பேரவை செயலாளரும், 10வது வார்டு கவுன்சிலருமான காமராஜ், மாவட்ட அதிமுக பொருளாளர் முரளி, இனாம்கரூர் நகரச்செயலாளர் தமிழ்நாடு செல்வராஜ், இனாம்கரூர் ஜெ.பேரவை செயலாளர் செல்வராஜ், கரூர் இளைஞரணி நிர்வாகி கோல்ட் ஸ்பாட் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.