தினகரன் 30.11.2010
தூர் வாரும் பணி தீவிரம்
புதுக்கோட்டை
, நவ. 30: பலத்த மழையால் தோரண வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளாலும், நீண்ட காலமாக தூர் வாரப்படாததாலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், பாதசாரிகள் சிரமத்துடன் சென்றுவந்தனர்.இந்நிலையில் நேற்று தெற்கு ராஜவீதி நகராட்சி அலுவலகம் எதிரில் தோரண வாய்க்காலில் தூர் வாரும் பணி நடைபெற்றது
. நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையிட்டார். பொக்ளின் இயந்திரத்தின் உதவியுடன் தூர் வாரும் பணி நடந்தது.