Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புகை பிடிக்க தடை போர்டுவைக்க உத்தரவு

Print PDF

தினமலர்                30.11.2010

புகை பிடிக்க தடை போர்டுவைக்க உத்தரவு

புதூர் : பெட்டி கடைகளின் முன்பு புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற விளம்பர போர்டு வைக்காத கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக மக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்கள், காய்கறி மார்க்கெட், அரசு அலுவலகங்களில் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்று தடை உள்ளது. மேலும் ஒவ்வொரு பெட்டிகடை முன்பும் 2 அடி அகலம், 3 அடி நீளத்தில் புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற விளம்பர பலகை வைக்க வேண்டும். போர்டு வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என அனைத்து நகராட்சி நகர் நல அலுவலர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.