தினகரன் 01.12.2010
கொசு ஒழிப்பு பணி
பட்டுக்கோட்டை, டிச.1: பட்டுக்கோட்டை நகராட்சியில் நேற்று முன்தினம் கொசுஒழிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் கலன்களை அழித்தல், வீடு வீடாக சென்று சுகாதார கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுடன் முதிர் கொசு அழிப்பு பணிக்காக புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளை நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் கண்டியன் தெருவில் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நடராஜன், மாரிமுத்து மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கொசு ஒழிப்பு பணியில் 17 பேர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் இவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.