Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார கேடான உணவு அழிப்பு: 200 கிலோ அயோடின் இல்லாத உப்பு பறிமுதல்

Print PDF

தினமணி           03.12.2010

சுகாதார கேடான உணவு அழிப்பு: 200 கிலோ அயோடின் இல்லாத உப்பு பறிமுதல்

திருநெல்வேலி,டிச.2: திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை சுகாதாரக் கேடான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அழித்தனர். மேலும் 200 கிலோ அயோடின் இல்லாத உப்பையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இம் மாநகர் பகுதியில் சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி சுகாதாரத்தைப் பேணவும்,தொற்று நோய்கள் எதுவும் பரவாமல் தடுக்கவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதில் உணவகங்களில் சுகாதார முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு,பரிமாறப்பட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் என்.சுப்பையன் எச்சரிக்கை விடுத்தார்.

இதன் விளைவாக மாநகராட்சி சுகாதாரத் துறையினர், உணவகங்களில் திடீர் சோதனை நடத்தி, சுகாதாரமற்ற உணவகங்களை மூடி வருகின்றனர். இந்த திடீர் சோதனை திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இச் சோதனை மொத்தம் 40 உணவகங்களில் நடத்தப்பட்டது. இதில் சில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, திறந்த வெளியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வடை,பஜ்ஜி உஹள்ளிட்டவற்றை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதேபோல சில அசைவ உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து, அவர்கள் அழித்தனர்.

இதில் ஒரு கடையில் அரசு தடை செய்திருக்கும் அயோடின் இல்லாத உப்பு 200 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த உப்பை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த திடீர் சோதனை மாநகராட்சி உணவு ஆய்வாளர் கலியனாண்டி,சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் நடத்தினர்.