Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை டவுன் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்          07.12.2010

நெல்லை  டவுன் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

நெல்லை, டிச. 7: நெல்லை மாநகராட்சி பகுதியிலுள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று உணவு ஆய் வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் அரசக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பழனி தலைமையிலான அதிகாரிகள் குழு வினர் டவுனில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந் தன. மைதா மாவு, அச்சுவெல்லம், உப்பு, இடியாப்ப மாவு, மசாலா பொருட்கள் என ரூ.10 ஆயிரம் மதிப்பி லான காலாவதியான பொருட்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.

அவை உடனடியாக அழிக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதிக்குள் தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அக்கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நெல்லை டவுனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.