தினமணி 07.12.2010
துப்புரவுப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
கோவை, டிச. 6: கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமில் 620 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சியும், வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இம் முகாமை நடத்தின. துணை மேயர் நா.கார்த்திக் தொடக்கி வைத்தார். சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, எதிர்க்கட்சித் தலைவர் வெ.ந.உதயகுமார், நகர் நல அலுவலர் ஹரிகிருஷ்ணன், உதவி நகர்நல அலுவலர் பி.அருணா, மாநகராட்சி உறுப்பினர் விஜயலட்சுமி, வாசன் கண் மருத்துவமனை பொதுமேலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர்.