தினமணி 09.12.2010
கோபியில் சிறப்பு துப்புரவுப் பணி
கோபி, டிச. 8: கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் சிறப்பு துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவுபடி, கோபி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், கடந்த 2 வாரங்களாக இப்பணி நடைபெறுகிறது.
சிறப்பு துப்புரவுப் பணி அலுவலர், 3 துப்புரவு ஆய்வாளர்கள் 5 துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில், நகராட்சிக்கு உள்பட்ட 6, 7, 8, 9, 10-வது வார்டுக்கு உள்பட்ட, யாகூப் வீதி ,புகழேந்தி வீதி, புதுச்சாமி கோயில் வீதி, வாய்க்கால் ரோடு, ராமநாதன் வீதி, திருவேங்கடம் வீதி, கருமாயா வீதி, புதிய ஆஸ்பத்திரி வீதி, வரதன் வீதி ஆகிய இடங்களில் துப்புரவுப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 145 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர். குப்பைகள் அள்ளப்பட்டு, சாக்கடை அடைப்பு எடுக்கப்பட்டு, தூர் வாரப்பட்டன. சாலை ஓரங்களில் உள்ள புற்களை வெட்டி, கல், மண் அகற்றப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு மருந்தும் தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் சிறப்பு துப்புரவுப் பணி நடைபெறும் என்று, கோபி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.