Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளிபாளையம் நகராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவு முகாம்

Print PDF

தினகரன்                      15.12.2010

பள்ளிபாளையம் நகராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவு முகாம்

பள்ளிபாளையம், டிச.15: நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தி பள்ளிபாளையம் நகராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவு முகாம் மேற்கொள்ளப்பட்டது. 33 துப்புறவு பணியாளர்களை கொண்டு சாலையோரம் மண்டிக்கிடந்த புல்புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

பள்ளிபாளையம் நகராட்சி கருமஞ்செட்டிகாடு பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடைபெற்றது. நோய்பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்திடவும் சாலையோரங்களை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள நகராட்சி மேற்கொண்ட இந்த சிறப்பு துப்புரவு முகாமை நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி துவக்கி வைத்தார். துப்புரவு அதிகாரி செங்கோட்டையன் மேற்பார்வையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முகாமில் 33 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று சுற்றுப்புறங்களில் தேங்கி கிடந்த புல்புதர்களை வெட்டி அகற்றி பிளீச்சிங் பொடிகளை தூவினார்கள். மாதம் ஒருமுறை அனைத்து வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை ஒன்று திரட்டி இதுபோல ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு துப்புரவு முகாம் மேற்கொள்ளப்படும் என நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 15 December 2010 05:55