தினகரன் 30.12.2010
நகராட்சி சார்பில் முழு துப்புரவு பணி
பொள்ளாச்சி, டிச 30:
பொள்ளாச்சி நகராட்சியின் சுகாதார பிரிவு ஊழியர்களை கொண்டு உழவர் சந்தை உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று முழு துப்புரவு பணி நடைபெற்றது.
பொள்ளாச்சி நகரில் பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட்டுகள், காந்தி வாரச் சந்தை உள்ளிட்ட பல இடங்களில் குப்பை கள் ஆங்காங்கு தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாக நகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வாரம் தோறும் புதன்கிழமைகளில் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் கொண்டு முழு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் உறுதியளித்திருந்தார்.
அதன்படி வாரம் தோறும் குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து முழு துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று 6 இடங்களில் துப்புரவு பணி நடைபெற்றது. நகர்நல அலுவலர் குணசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களான கோவிந்தராஜ், சுப்புராஜ், செல்வ பாண்டியன், ஜெரால்டு, சிவசாமி ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடைபெற்றது.
உழவர் சந்தை, நேரு நகர் மரப்பேட்டை பள்ளம், நந்தனார் காலனி, மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதி, அழகாபுரி வீதி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 6 இடங்களிலும் குப்பைகள் அகற்றப்பட்டு முழு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 250 துப்புரவு பணியாளர் கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியின் சுகாதார பிரிவு ஊழியர்களை கொண்டு உழவர் சந்தை உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று முழு துப்புரவு பணி நடைபெற்றது.
பொள்ளாச்சி நகரில் பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட்டுகள், காந்தி வாரச் சந்தை உள்ளிட்ட பல இடங்களில் குப்பை கள் ஆங்காங்கு தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாக நகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வாரம் தோறும் புதன்கிழமைகளில் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் கொண்டு முழு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் உறுதியளித்திருந்தார்.
அதன்படி வாரம் தோறும் குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து முழு துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று 6 இடங்களில் துப்புரவு பணி நடைபெற்றது. நகர்நல அலுவலர் குணசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களான கோவிந்தராஜ், சுப்புராஜ், செல்வ பாண்டியன், ஜெரால்டு, சிவசாமி ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடைபெற்றது.
உழவர் சந்தை, நேரு நகர் மரப்பேட்டை பள்ளம், நந்தனார் காலனி, மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதி, அழகாபுரி வீதி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 6 இடங்களிலும் குப்பைகள் அகற்றப்பட்டு முழு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 250 துப்புரவு பணியாளர் கள் ஈடுபடுத்தப்பட்டனர்.