தினமணி 01.09.2009
மெரீனா கடற்கரையில் 65 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்
சென்னை, ஆக. 31: மெரீனா கடற்கரையில் கடந்த 3 நாள்களில் 65 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கடந்த 29 முதல் 31-ம் தேதி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதையடுத்து கடற்கரையில் குவிந்த களிமண், காகிதங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியில் 150 ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 65 மெட்ரிக் டன் எடையுள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு, 14 லாரிகள் மூலம் அகற்றப்பட்டதாக மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.