தினமணி 01.09.2009
கோயில் குளத்தில் குப்பைகள் அகற்றம்
பொன்னேரி, ஆக. 31: தினமணி செய்தி காரணமாக பொன்னேரி அகத்தீஸ்வர் ஆலய கோயில் குளத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.
பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலய திருக்குளத்தின் நீரில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், அதனால் நீர் மெல்ல மாசடைந்து வருகிறது என கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தினமணியில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, அகத்தீஸ்வரர் ஆலய குளத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பொன்னேரி பேரூராட்சி ஊழியர்கள் அங்கிருந்து அகற்றினர்.
பக்தர்கள் வரவேற்பு
கோயில் குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றியதை நாள் தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரவேற்றதுடன், இச் செய்தியை வெளியிட்ட தினமணிக்கு நன்றியையும் தெரிவித்தனர்.