Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியார் குப்பை அள்ளும் பணி ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கும்

Print PDF

தினமணி         15.12.2011

தனியார் குப்பை அள்ளும் பணி ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கும்

சென்னை, டிச.14: சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை 2012-ம் ஆண்டு ஜனவரி 3-ம் வாரத்தில் புதிய தனியார் நிறுவனம் தொடங்கும் என்று ஆணையர் டேவிதார் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:

டிசம்பர் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை94 ஆயிரத்து 732 சதுரமீட்டர் பரப்பளவில் 1999 சாலைகள் கட்டட இடிபாடுகள் மூலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் தார்க் கலவை மூலம் செப்பனிடும் பணி டிசம்பர் 18-ம் தேதி முதல் தொடங்கும்.

குப்பை அள்ளும் பணியில் நீல்மெட்டல் நிறுவனத்தின் ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

சென்னை மாநகராட்சியின் 9 வது மண்டலமான தேனாம்பேட்டை, 10 வது மண்டலமான கோடம்பாக்கம், 13 வது மண்டலமான அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை ராம்கி என்விரோ என்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் 2012 ஜனவரி மாதம் 3-ம் வாரத்தில் குப்பைகளை அள்ளும் பணியை தொடங்கும். அதுவரை அந்த இடங்களில் மாநகராட்சி மூலம் குப்பைகள் அகற்றப்படும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு பிப்ரவரி மாதத்தில் சாலைப் பணிகள் தொடங்கும்.

பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள், பிரதான சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.