தினமணி 30.07.2012
மல்லாங்கிணரில் துப்புரவுப் பணி
காரியாபட்டி, ஜூலை 29: மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த சிறப்பு சுகாதார முகாம் நடைபெற்றது.
செயல் அலுவலர் மாலா தலைமை வகித்தார்துணைத் தலைவர் மணிராஜ் முன்னிலை வகித்தார். மல்லாங்கிணர் பேரூராட்சி உரப் பூங்காவில் தலைவர் நாகையா மரக்கன்றுகளை நட்டார். செயல் அலுவலர் மாலா பேசும்போது, ஒட்டு மொத்த சிறப்பு சுகாதார முகாம் மூலம் மல்லாங்கிணர் பகுதியில் தீவிர துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது.சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மல்லாங்கிணர் பகுதியில் நடப்பட்டுள்ளன.பேரூராட்சிப் பகுதியில் துப்புரவுப் பணி தொடர்ந்து நடைபெற பொதுமக்கள் ஊழியர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார். வார்டு உறுப்பினர்கள் காளிமுத்து, கருப்பையா, அலுவலகத் தலைமை எழுத்தர் அன்பழகன், சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், பேரூராட்சி அலுவலர்கள் கண்ணன், பிலிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.