தினமணி 31.07.2012
பாலாறு சுத்தமாகிறது!
ஆம்பூர், ஜூலை 30: ஆம்பூர் பாலாற்றைச் சுத்தப்படுத்தும் பணியை ஆம்பூர் நகராட்சி திங்கள்கிழமை மேற்கொண்டது.
பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுமாறு நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி உத்தரவிட்டார்.
சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், மணிவண்ணன் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை டிராக்டர்கள் மூலம் அகற்றி அவை நகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.