தினமலர் 09.08.2012
சுகாதாரமற்ற குடிநீர் வழங்க தடை
வேடசந்தூர் : வேடசந்தூரில் நகரில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு சுகாதார துறை தடை விதித்துள்ளது.வேடசந்தூர் நகருக்கு குங்குமகாளியம்மன் கோயில் அருகில் உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
கிணற்றை மூடியிருந்த தகரம் உடைந்து குப்பைகள் நிறைந்து அசுத்தமாக உள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதந்தது. இதனால் சுகாதார துறையினர் கிணற்று நீர் முழுவதையும் வெளியேற்றி சுத்தப்படுத்திதான் குடிநீர் வழங்க வேண்டும்.மேலும் தாங்கள் ஆய்வு செய்த பின்தான் குடிநீர் வழங்க உத்திரவிட்டது. அழகாபுரி அணைப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் நீரையும் பரிசோதனை செய்த பின்பு வழங்கவும் உத்திரவிட்டுள்ளனர்.