தினகரன் 10.08.2012
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்
சாத்தான்குளம், : சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ.72 ஆயிரத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் இல்லாததால் சுகாதாரத்துறையிடம் இருந்து வாடகைக்கு பெற்று வார்டு பகுதிகளில் மருந்து புகை அடிக்கப்பட்டது. இதனால் தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது பேரூராட்சிக்கு ரூ.72 ஆயிரத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது.இதையடுத்து சாத்தான்குளம் 9வது வார்டு முத்தாரம்மன் கோயில் தெருவில் கொசு மருந்து அடிக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் ஜோசப் தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்து தெருக்களிலும் அடிக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி முருகேசன், துணைத்தலைவர் வீரக்குமார், கவுன்சிலர்கள் சரவணன், இந்திரா, ஜாக்குலின், முன்னாள் கவுன்சிலர் குற்றாலிங்கம், அதிமுக பிரமுகர் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.