தினமணி 10.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்
பவானி, ஆக. 9: சித்தோட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
÷சித்தோடு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவியர் பங்கேற்று பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையும் தீமைகள், மக்கும் பொருள்களைப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டபடியும் சென்றனர்.
இப்பேரணியை பேரூராட்சித் தலைவர் ஆர்.வரதராஜன் தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் செல்வன், துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.