தினகரன் 18.08.2012
துப்புரவு பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்
சோழவந்தான், : துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் சோழவந்தான் பேரூராட்சியில் நடந்தது.சோழவந்தான் பேரூராட்சி, மதுரை லைப் கேர் மருத்துவமனை இணைந்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. சுதந்திர தின விழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாட்ஷா தலைமை வகித்தார்.துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் பாண்டியம்மாள் ராமு முகாமை துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.அக்கு பஞ்சர் முகாம்: வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது பதினெண் சித்தர் பீடம். பதினெண் சித்தர் பீடம் டிரஸ்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பீடத்திற்கான மகா அபிஷேகம், ,அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதை முன்னிட்டு, இலவச அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் ராணி முன்னிலை வகித்தார். டிரஸ்ட் சேர்மன் நாராயணன் முகாமை துவக்கி வைத்தார். ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.