தினமலர் 23.08.2012
குடிநீரை காய்ச்சிகுடிக்க அட்வைஸ்
ஆத்தூர்: ஆத்தூர் நகர் பகுதி மக்கள், மழை காலத்தில் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும், என்று நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, ஆத்தூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிக்கையில், ஆத்தூர் நகர் பகுதியில், 33 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, மழை பெய்து வருவதால், தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால், குடிநீரை கொதிக்க வைத்து ஆறியவுடன் பருக வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.