தினமணி 23.08.2012
கொசு ஒழிப்புப் பணியை தீவிரமாக்க வேண்டும்
விழுப்புரம், ஆக. 22: விழுப்புரம் நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியது:
சாகுல் ஹமீது: கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. தெருக்களில் கொசு மருந்து அடிப்பதற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். மருந்து அடிக்கும் போது அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுச் செல்ல வேண்டும் என்றார்.தொடர்ந்து இதனை அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.