Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பண்ருட்டியில் ரூ.28 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி

Print PDF

தினமணி            24.08.2012

பண்ருட்டியில் ரூ.28 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி

பண்ருட்டி, ஆக. 23: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற திருச்சி சாலை மற்றும் சென்னை சாலையில் ரூ.28 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

÷பண்ருட்டி நகரின் மையப்பகுதியாகவும், சென்னை-கும்பகோணம் மற்றும் கடலூர்-சித்தூர் சாலை சந்திக்கும் இடமாகவும் நான்கு முனை சந்திப்பு உள்ளது. மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படும்.

÷மழை நீர் வழிந்தோட நான்கு முனை சந்திப்பு பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் மழை காலத்தில் மழை நீர் செல்ல வழியின்றி கடலூர்-சித்தூர் சாலையில் பஸ் நிலையம் முதல் ரங்கா பில்டிங் வரையிலும், சென்னை-கும்பகோணம் சாலையில் மார்கெட் முதல் கிளை சிறை வரையிலும் முழங்காலுக்கு மேல் மழை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கும்.

÷தேங்கி நிற்கும் இந்நீரால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மழை நீர் தேங்கி நிற்காத வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

÷இக்கோரிக்கைகளை ஏற்று ரூ.28 லட்சம் மதிப்பில் சென்னை சாலையில் 1.5 மீட்டர் அகலத்தில், 150 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் திருச்சி சாலையில் (சித்தூர் சாலை) 90 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

÷சென்னை சாலையில் அமைக்கப்படும் கழிவு கால்வாயால் இனி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை என  நகராட்சிப் பொறியாளர் ஆர்.ராதா கூறினார். பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம் உடனிருந்தார்.

Last Updated on Friday, 24 August 2012 10:33