Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பாலை பகுதியில் பன்றிகள் பிடிப்பு

Print PDF

தின மணி          18.02.2013

திருப்பாலை பகுதியில் பன்றிகள் பிடிப்பு

திருப்பாலை, ஊமச்சிகுளம் பகுதிகளில் பன்றிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதையும் மீறி பன்றிகள் வளர்க்கப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் உத்தரவின்பேரில், திருப்பாலை, ஊமச்சிகுளம பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த 17 பன்றிகள் பிடிக்கப்பட்டன.

தொடர்ந்து, மாநகராட்சிப் பகுதியில் பன்றிகள் இருக்கின்றனவா என சோதனை நடத்தப்படும் என்றும், இதில் பிடிபடும் பன்றிகள் ஏலம் விடப்படும் எனவும், ஆணையர் எச்சரித்துள்ளார்.

Last Updated on Monday, 18 February 2013 08:52