Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

Print PDF
தின மணி               21.02.2013

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறை மூலம்  புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர்  ப. செந்தில்குமார் பேசியது:

அரியலூர் நகராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த 38,687 நபர்கள் பயன்படும் வகையில், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன்மூலம் 8 தொடக்கப் பள்ளி, 3 உயர்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி, 1 நடுநிலைப் பள்ளி மற்றும் 7 விடுதிகளிகள் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணிவகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 மருத்துவ அலுவலர்கள், தலா 1 மருந்தாளுநர், செவிலியர், ஆய்வக நுட்ப வல்லுநர், துப்புரவு பணியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பணிபுரிவார்கள்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருந்து,  மாத்திரைகள் கொள்முதல் செய்ய நிகழாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு புறநோயாளிகள், உள்நோயாளிகள், பேறுகால பராமரிப்பு, இலவச பிரசவ சேவை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, குடும்ப நல ஆலோசனை, பால்வினை நோய் சிகிச்சை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும்.

மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஜனனி சுரக்க்ஷô யோஜனா  பிரசவ நிதியுதவித் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, தனியார் மருத்துவமனைக்கு நிகரான நவீன வசதிகளுடன் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன், நகராட்சி ஆணையர் சரஸ்வதி, புள்ளியியல் உதவி இயக்குநர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர்கள் கஸ்தூரிபாய், செரோஸ்பானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Last Updated on Thursday, 21 February 2013 12:10